Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 21 May 2012

அடை (அ) கார தோசை, அரைத்த உடனே தோசை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

* அரைக்க:

* 1. இட்லி அரிசி - 4 கப்
* 2. துவரம் பருப்பு - 1 கப்
* 3. மிளகாய் வற்றல் - 10
* 4. பூண்டு - 5 பல்
* 5. உப்பு
* தாளிக்க:
* 1. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
* 2. உளுந்து + கடலை பருப்பு - 1 பெரிய குழிக்கரண்டி
* 3. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* 4. கொத்தமல்லி, கருவேப்பிலை


செய்முறை

* அரிசி, பருப்பை இரவே ஊர வைக்கவும்.
* மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மாவில் கொட்டி கலக்கவும்.
* இதை வழக்கம்போல் தோசை வார்க்கவும்.


குறிப்பு:
இதற்கு தேங்காய் சட்னி, வெங்காய தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும். காரம் அதிகமாக சேர்த்தால் எதுவும் இல்லாமல் வெறும் அடை தோசை சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க விரும்பாதோர் பூண்டு இல்லாமலும் செய்யலாம். மாவு புளிக்க தேவையில்லை. அரைத்த உடனே தோசை செய்யலாம்.

No comments:

Post a Comment