தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி - அரை கப், தண்ணீர் - மூன்று கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன் (சற்று குவித்து அளக்கவும்), மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி (அ) வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி.
செய்முறை: தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் காய்கறிகளை சேர்த்து அரை வேக்காடு வேக விடவும். காய்கறிகள் பாதி அளவில் வெந்து கொண்டிருக்கும்போது இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, சர்க்கரை சேர்த்து வேக விடவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும், கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். தீயைக் குறைத்து கிளறவும். மீண்டும் 3 நிமிடம் கொதித்ததும் இறக்கி, மிளகுத்தூள், வெங்காயத்தாள் (அ) கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
இந்த காய்கறி சூப்பில் கிரீம் சேர்த்து செய்யாததால் உடல் எடை கூடாது. கலோரி குறைவு.வயிற்றுக்கும் நிறைவாக இருக்கும்.
No comments:
Post a Comment