தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் - தேவைக்கு
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1\2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
* பாலை நன்றாகக் காய்ச்சவும்.
* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
* சிறிது உப்பு சேர்க்கவும்.
* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.
* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.
* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.
* பின்னர், பால், தேங்காய்ப்பால் - இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.
* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!
இதன் சிறப்பு:
* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.
* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.
* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.
சமையல் குறிப்புகள்
ஹெல்த் ஸ்பெஷல்
Monday, 10 September 2012
பாசிப்பருப்பு இட்லி
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்கவும்.
* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.
* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்கவும்.
* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.
* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Saturday, 8 September 2012
கொத்து இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் (உதிரியானது) - 2 கப்
வேக வைத்த நாட்டுக் காய்கறிகள் (கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு) - தலா 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1\2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
* கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.
* பிறகு தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
* சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகளை வேக வைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.
* உப்பு சேர்த்து தண்ணீர் வற்ற நன்கு வேக விடவும்.
* தண்ணீரே தெரியாமல், எண்ணெய் கக்கும் அளவுக்கு வந்ததும், இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தணலில் வைத்து, ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்துக் கிளறவும் (இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீர் தெளிக்க வேண்டும்).
* 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து, மறுபடி கிளறிவிட்டு, கடைசியாக சோம்புத் தூள் தூவிப் பரிமாறவும்.
* காய்கறிகளுக்கு பதில் காளான் மட்டுமே சேர்த்தும், இதே முறையில் கொத்து இடியாப்பம் செய்யலாம்.
இடியாப்பம் (உதிரியானது) - 2 கப்
வேக வைத்த நாட்டுக் காய்கறிகள் (கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு) - தலா 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1\2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
* கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.
* பிறகு தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
* சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகளை வேக வைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.
* உப்பு சேர்த்து தண்ணீர் வற்ற நன்கு வேக விடவும்.
* தண்ணீரே தெரியாமல், எண்ணெய் கக்கும் அளவுக்கு வந்ததும், இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தணலில் வைத்து, ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்துக் கிளறவும் (இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீர் தெளிக்க வேண்டும்).
* 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து, மறுபடி கிளறிவிட்டு, கடைசியாக சோம்புத் தூள் தூவிப் பரிமாறவும்.
* காய்கறிகளுக்கு பதில் காளான் மட்டுமே சேர்த்தும், இதே முறையில் கொத்து இடியாப்பம் செய்யலாம்.
Subscribe to:
Posts (Atom)