Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 10 September 2012

நாவையும் சுண்டி இழுக்கும் இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் - தேவைக்கு
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1\2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சவும்.

* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* சிறிது உப்பு சேர்க்கவும்.

* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.

* பின்னர், பால், தேங்காய்ப்பால் - இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.

* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!

இதன் சிறப்பு:

* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.

* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.

* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.

பாசிப்பருப்பு இட்லி

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்கவும்.

* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.

* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.

* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Saturday, 8 September 2012

கொத்து இடியாப்பம்

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் (உதிரியானது) - 2 கப்
வேக வைத்த நாட்டுக் காய்கறிகள் (கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு) - தலா 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1\2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.

* பிறகு தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

* சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.

* காய்கறிகளை வேக வைத்த தண்­ணீருடன் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தண்­ணீர் வற்ற நன்கு வேக விடவும்.

* தண்ணீ­ரே தெரியாமல், எண்ணெய் கக்கும் அளவுக்கு வந்ததும், இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.

* குறைந்த தணலில் வைத்து, ஒரு கைப்பிடி தண்ணீ­ர் தெளித்துக் கிளறவும் (இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீ­ர் தெளிக்க வேண்டும்).

* 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து, மறுபடி கிளறிவிட்டு, கடைசியாக சோம்புத் தூள் தூவிப் பரிமாறவும்.

* காய்கறிகளுக்கு பதில் காளான் மட்டுமே சேர்த்தும், இதே முறையில் கொத்து இடியாப்பம் செய்யலாம்.

முந்திரி மசால் தோசை

தேவையான பொருட்கள்:

தோசைக்கு:

தோசைமாவு - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவுக்கு:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கேரட் - 1
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
தக்காளி - 2
முந்திரி - 10
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்து - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசியுங்கள்.

* கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* பின்னர் கேரட், பட்டாணி சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* அத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

* கடைசியில் கடலை மாவை, சிறிது தண்­ணீரில் கெட்டியாகக் கரைத்து, மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

* தோசைக்கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள்.

* எண்ணெய், நெய்யைக் கலந்துகொண்டு, தோசையைச் சுற்றிலும் சிறிது ஊற்றுங்கள்.

* நடுவில் சிறிது மசாலாவை பரவினாற்போல வைத்து, தோசையை மடித்து வெந்ததும் எடுங்கள்.

* ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும் சிறிது தண்­ர் தெளித்து, கல்லைத் துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை பொன்னிறமாக வரும்.

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்:

ரசப் பொடி - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - 1 தழை
கடுகு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் (நீள்வாக்கில் நறுக்கவும்) இரண்டு கப் தண்­ர் சேர்த்து, கொதிக்க விடவும்.

* 1 கப் வேகவைத்த துவரம் பருப்பை போட்டு பொருட்கள் முழுவதும் பச்சை வாடை போகும் வரை வேக வைக்கவும்.

* ரசப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு சூடு செய்யவும்.

* கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து அதில் சேர்க்கவும்.

* அதனை இறக்கி, 2 எலுமிச்சம் பழத்தைப் பிழித்து நன்றாகக் கலக்கவும். பருப்பு வேகவைத்த நீரையும் சேர்க்கவும்.

குறிப்பு: சமைத்து முடிக்கும் வரை ரசத்தை கலக்கக் கூடாது.

மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது - 200 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
பிஸ்தா பருப்பு - 10
குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்).
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டா - 1 சிறிய பாக்கெட்
தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
நெய் - 25 மி.லி.,
மல்லித்தழை நறுக்கியது - 1 கப்
மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.

* வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.

* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.

* மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.

* இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.

ஓட்ஸ் பகலாபாத்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிய பிறகு இஞ்சியையும் பெருங்காயத்தூளையும் மிக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்.

* இதில் தயிரைக் கலந்து உப்பையும் மிக்ஸ் பண்ணிவிட வேண்டும்.

* ஐந்து நிமிடம் கழித்து ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் பகாலாபாத் ரெடி.

தூத் மக்கன்வாலா

தேவையான பொருட்கள்:

பனீர் - 1\4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1\2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - 1\4 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1\4 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
வெண்ணெய் - 50 கிராம்
பாலாடை - 4 டீஸ்பூன்

செய்முறை:

* பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து, வெண்ணெயில் ஒவ்வொன்றாக வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.

* மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும்.

* வெந்தய இலை, தயிர் சேர்க்கவும்.

* ஓரளவு கொதித்ததும் பனீர் துண்டுகள் சேர்க்கவும்.

* விருப்பப்பட்டால் சிகப்பு கலர் சேர்க்கலாம்.

* நன்றாகக் கொதித்ததும், பாலாடை சேர்த்து, பச்சை வெங்காயம், தக்காளி மற்றும் எலுமிச்சை பழ வில்லைகளுடன் பரிமாறவும்.

என்ன இருக்கு?

பன்னீரில் புரோட்டீன், வைட்டமின் நிறைய உண்டு. கொலஸ்ட்ரால் கிடையாது. தயிரிலும், வெண்ணெயிலும் கொழுப்பும், கால்சியமும் உண்டு.

சுறா மீன் புட்டு

தேவையான பொருட்கள்:

சுறா மீன் துண்டு - 300 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3 அல்லது 4
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 6 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* அதனுடன் மஞ்சள் சேர்க்கவும்.

* மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம்.

* மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக(அதாவது) உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

* கடாயை சூடாக்கவும்.

* அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

* அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

* உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட்

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை:

* உளுத்தப்பருப்பை, வெறும் வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

* மிக்ஸியில் போட்டு, ரொம்பவும் நைஸாக இல்லாமல் அரைக்கவும்.

* சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் பொடி செய்யவும்.

* அரைத்த உளுத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் கலந்துகொள்ளவும்.

* அந்த மாவை, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் கட்லெட் போல தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

* அடுப்பை 'ஸிம்'மில் வைத்து, தோசைக்கல்லை காயவைத்து, தட்டிய கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு, லேசாகப் பொரிந்ததும் உடனே எடுத்துவிட வேண்டும்.

* பொரித்தெடுத்த கட்லெட் மீது விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி சுடச்சுட பரிமாறலாம்.

* இந்த கட்லெட்டை 3 முதல் 4 நாட்கள் வரை காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தியும் பயன்படுத்தலாம்.

பயன்கள்:

'உளுத்துப் போன உடம்புக்கு, உளுந்து' எனப் பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். இடுப்பு வலுப்பெற உளுந்து மிகச் சிறந்த உணவு. உடல் வலிமை பெற்றுத் திகழும்

Friday, 7 September 2012

வெத்தலை-பூண்டு சாதம்

தேவையான பொருட்கள்:

வெற்றிலை - 3
சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ஸ்பெஷல் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

ஸ்பெஷல் மசாலாவுக்கு:

கருப்பு எள் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சுக்குப் பொடி - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
விரலி மஞ்சள் - அரை இன்ச்
உப்பு - தேவைக்கேற்ப

எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

செய்முறை:

* அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.

* கடாயில் நெய் விட்டு, பட்டை, சோம்பு வறுக்கவும்.

* பூண்டு சேர்க்கவும்.

* வெற்றிலையை நறுக்கிச் சேர்க்கவும்.

* ஸ்பெஷல் மசாலா பொடியும் உப்பும் சேர்த்து, தண்­ணீர் தெளித்து வதக்கவும்.

* வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, தீயைக் குறைத்து ஒரு கை தண்­ணீர் தெளித்துக் கலந்து, மூடி வைக்கவும்.

* 3 நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்.

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் - தேவைக்கு
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1\2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சவும்.

* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* சிறிது உப்பு சேர்க்கவும்.

* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.

* பின்னர், பால், தேங்காய்ப்பால் - இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.

* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!

இதன் சிறப்பு:

* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.

* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.

* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.

லட்டு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கிலோ
சர்க்கரை - 1-1/4 கிலோ
முந்திரி - 15
விதையில்லா திராட்சை - 10
சோடா - 1 சிட்டிகை
கற்கண்டு - 10 கிராம்
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
எண்ணெய் - வறுப்பதற்கு
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - 5

செய்முறை:

* மாவு, சோடா, நீர் சேர்த்து மாவு போல் கரைத்து சூடான எண்ணெயில் ஜார்னியின் மூலமாக விழ வைத்து வறுத்து எடுத்து பூந்தி செய்யவும்.

* 1:1 சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் செய்யவும்.

* இந்த சிரப்பில் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்க்கவும்.

* பூந்திகளை அந்த சர்க்கரை சிரப்பில் போட்டு நன்கு கலக்கவும்.

* முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து இந்த கலவையில் சேர்க்கவும்.

* ஏலக்காய் பவுடர் விதையில்லா திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.

* இந்த கலவையானது கையில் பிடிக்கும் அளவிற்கு சூடு குறைந்து விடும். இப்பொழுது சீரான உருண்டைகளாக கையில் இலேசாக அழுத்தி பிடிக்கவும். ஆற விடவும்.

குறிப்பு:

சர்க்கரை சிரப் சூடாக இருக்கும் போது சிரப்பில் பூந்தியை சேர்க்கவும்.

மைசூர் பாக்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
தண்ணீ­ர் - 75 கிராம்
நெய் - 100 கிராம்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

செய்முறை:

* கடலைமாவு, சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து மிருதுவாக கலக்கவும். இதை வாணலியில் ஊற்றி சிறுதீயில் சமைக்கவும்.

* மற்றொரு பாத்திரத்தில் நெய்யை சிறு தீயில் வைக்கவும். சிறிது சிறிதாக சூடான நெய்யை கடலை மாவு கலவையில் சேர்த்து விடாமல் கிளறவும். அது பக்கங்களில் ஒட்டாமல் வரும் வரை இவ்வாறு செய்யவும். சோடா மாவு சேர்த்துக் கிளறவும்.

* ஒரு ட்ரேயில் உட்பகுதியில் நெய்யை தடவி சமைத்த கலவையை அதில் ஊற்றவும்.

* அது சூடாக இருக்கும்போது அதன் மேற்பகுதியில் இணைகோடுகள் வரைந்து துண்டுகளாக வெட்டவும்.

* கடலை மாவு தீய்ந்து போகாமல் இருப்பதற்கு சமைக்கும்போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எள்ளுருண்டை

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு விதை - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்

செய்முறை:

* வாணலியில் எள்ளை போட்டு அது வெடிப்பதற்கு ஆரம்பிக்கும் வரை வறுக்கவும்.

* வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பாகு செய்யவும்.

* பாகானது போதுமான அளவிற்கு வரும்வரை சூடு செய்யவும்.

* கெட்டியான அளவிற்கு ஒரு துளி பாகை நீரில் போட்டால் உடனே கெட்டியாக வரவேண்டும்.

* இந்த நிலைக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி இதனை எள்ளுடன் சேர்க்கவும்.

* கையால் தாங்குமளவிற்கு சூடு ஆறிய பிறகு கையில் அரிசி மாவையோ (அ) நெய்யையோ தடவவும். கைகளைப் பயன்படுத்தி எள்ளை சீரான சிறு உருண்டைகளாக செய்யவும்.

குறிப்பு:

எள்ளுருண்டைகள் கெட்டியாக உருவாவதற்கு பாகை 2- கம்பி சீரான பதத்திற்கு தயாரிக்கவும்.

ரவா லட்டு

தேவையான பொருட்கள்:

வெள்ளை ரவை - 1 கிலோ
சர்க்கரை - 1-1/2 கிலோ
ஏலக்காய் - 10 (பொடித்தது)
நெய் - 200 கிராம்
முந்திரி - 50 கிராம்

செய்முறை:

* உலர்ந்த வாணலியில் ரவையை வறுத்து பொடி செய்யவும்.

* நன்றாக பொடி செய்த சர்க்கரை ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

* முந்திரியை நெய்யில் வறுத்து இந்தக் கலவையில் சேர்க்கவும்.

* நெய்யை உருகுமளவிற்கு இலேசாக சூடு செய்து அதனுடன் கலந்து நன்கு கலக்கவும்.

* இந்த மாவை சீரான அளவு உருண்டைகளாக உருட்டவும்.

* இந்த இனிப்பு வகையுடன் பால் சேர்க்கலாம். ஆனால் லட்டை சீக்கிரமாக பயன்படுத்திவிட வேண்டும்.

காஷ்மீரி ஆலு தம்

தேவையான பொருட்கள்:

ஒரே அளவான சிறு வகை உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உறைந்த ஆடையுடன் கட்டித் தயிர் - 1/2 லிட்டர்

மசாலா செய்ய:

(இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
கஸீரி மேதி - 2 ஸ்பூன்
சிவந்த மிளகாய் - 4
நெய் - 3 ஸ்பூன்
தக்காளி ஜூஸ் - கெட்டியாக ஒரு கிண்ணம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரிக்கவும்.

* டூத்பிக்கினால் கிழங்கு ஒவ்வொன்றையும் குத்திவிடவும்.

* வாணலியில் 3 ஸ்பூன் நெய்விட்டு உருளைக்-கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.

* இஞ்சி முதல் மிளகாய் வரையுள்ள சாமான்களை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்குடன் போடவும்.

* இரண்டும் சேர்ந்து பொன்னிறமானதும், தயிர் முழுவதையும் கடைந்து ஊற்றவும்.

* தயிர் கொதித்து வற்ற ஆரம்பித்ததும் தக்காளி ஜூஸைச் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்புப் பதமாக வந்தவுடன் இறக்கவும்.

புரோகோலி கூட்டு

தேவையான பொருட்கள்:

புரோகோலி - 1/4 கிலோ
முழு பூண்டு - 1
வெங்காயம் - 1/4 (சிறிய துண்டு)
எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
தண்­ணீர் - 1/4 கப்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

செய்முறை:

* புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

* பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்றுத் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.

* புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீ­ர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.

* வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

Wednesday, 5 September 2012

மட்டன் சேமியா

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 பாக்கெட்
மட்டன்(கொத்தியது) - 150 கிராம்
தக்காளி - 2 (சிறியது)
புதினா - 7, 8 இலைகள்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
இஞ்சி - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
தனியா தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
கேசரி பவுடர் - சிறிதளவு
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1
கரம் மசாலா பவுடர் (அ) சிக்கன் மசாலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

* தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

* புதினா கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கறியை தண்­ணீரில் சுத்தம் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

* பின் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும்.

* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

* பச்சை வாசனை போனவுடன் கறி, தனியாதூள், மிளகாய் தூள், கேசரி பவுடர், கரம் மசாலா பவுடர் போட்டு வதக்கவும்.

* 2 கிளாஸ் தண்ணீ­ர் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். மேலும் 1 கிளாஸ் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் ஒவ்வொரு சேமியா சீக்கிரம் வெந்துவிடும் ஆனால் சில சேமியாவிற்கு நிறைய தண்­ணீர் தேவைப்படும்.

* தண்ணீ­ர் வற்றியதும் மூடி போட்டு மேலே கனமான சாமான் வைத்து சிம்மில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

சிக்கன் மக்ரோனி

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 150 கிராம்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீ ஸ்பூன்

செய்முறை:

* மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்­ணீர் வடித்துக்கொள்ளவும்.

* வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.

* பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.

* அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும்.

* எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.

* சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.

குறிப்பு:

* மக்ரோனியில் உப்பு சேர்த்திருப்பதால் சிக்கனில் தேவைக்கு மட்டும் சேர்க்கவும். விருப்பப்பட்டால் பொடிதாக நறுக்கிய வெங்காயத் தாள் சேர்த்து பரிமாறலாம்.

* மட்டனுக்கும் இதே செய்முறை தான். ஆனால் குக்கரில் மட்டனை அவிக்க வேண்டும். விருப்பப்பட்டால் புதினா, கொத்தமல்லி சேர்க்கலாம்.

பால் சுண்டைக்காய் பாயசம்

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த பால் சுண்டைக்காய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
திக்கான வெல்லக் கரைசல் - 1 கப்
திக்கான முதல் தேங்காய்ப் பால் - 1 கப்
முந்திரி - 10
திராட்சை - 20
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, கழுவி, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

* பால் சுண்டைக்காயை சுத்தம் செய்து, இடித்து கொஞ்சமாக தண்­ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து, மிக்சியில் இட்டு அரைத்து, வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை எடுத்துக் காய்ச்சி இறுகும் நிலையில் சுண்டைக்காய் சாறு, பருப்பு மசியல், சேர்த்துக் கிளறி, இறக்கும் தறுவாயில் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் சிவக்க வறுத்து வைத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கலக்கி சுவைக்கவும்.

* கசப்பு என்பதே இல்லாத ஆச்சரியமான ஆரோக்கிய பாயசம் இது.

Tuesday, 4 September 2012

மட்டன் பக்கோடா

தேவையான பொருட்கள்:

மட்டன் - 7 (அ) 8 சின்ன துண்டுகள்
வெங்காயம் - 1/2
இஞ்சி, பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

* குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்­ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.

* கறி வெந்தவுடன் தண்­ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.

* பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்­ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.

* மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.

* பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.

* சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

இதே மாதிரி சிக்கன் பக்கோடாவும் செய்யலாம். எலும்புடன் அல்லது எலும்பில்லாமல், சிறு சிறு துண்டுகளாக வேக வைத்துக்கொள்ளவும்.

ஆனியன் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

* சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.

* மற்ற பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை எட்டாக நறுக்கி அதை தனித் தனியே பிரித்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

* பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.

* பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்­ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.(இடையில் இருமுறை கிளறி கொள்ளவும்.)

* சிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

* இதை சாம்பார், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.

பட்டன் தட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)
பாசிப்பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)
பச்சை மிளகாய் - 8
பெருங்காயம் - சிறிது
நன்கு புளித்த தயிர் - 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை:

* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.

* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.

* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.

* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.

* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.

* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்.

கத்தரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2
தயிர் - 2 கப்
வெங்காயம் - 3
சர்க்கரை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 3
தனியா - 1/2 கப்
எண்ணெய் - 100 மி.லி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 3 அரைத்தது
இஞ்சி - 2

செய்முறை:

* கத்தரிக்காய் மேல் சிறிது எண்ணெய் பூசி சுடவும்.

* மேல் காம்பு, தோல் இவற்றை நீக்கவும். சுத்தம் செய்து மசித்து கொள்ளவும்.

* இப்பொழுது தயிர், வெங்காயம் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய், சர்க்கரை தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

* இரண்டு டீ ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து கறிவேப்பிலை, கடுகு போட்டு பொரிந்தவுடன் எண்ணெயை மசித்த கத்தரிக்காயில் ஊற்றவும். கலந்து குளிரச் செய்யவும்.

* கொத்தமல்லியுடன் அலங்கரித்து குளிர்ச்சியாக ஆன பிறகு பரிமாறவும். ஊற்றவும். சிறுதீயில் வைக்கவும். சொத்தமல்லியை தூவி பராத்தாவுடன் பரிமாறவும்.

* ஹைதராபாத்திலிருந்து அறிமுகமான இந்த உணவை பிரியாணியுடன் பரிமாறலாம்.

குறிப்பு:

கத்தரிக்காய்க்குப் பதிலாக வேறு வகையான பெரிய மிளகாய்களை வறுத்து பயன்படுத்தி மிர்சி காசாலன் செய்யலாம்.

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!


தேவையான பொருட்கள்:

வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

* புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.

* வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

* வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.

* கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* இந்த குழம்பு புளிப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.

இஞ்சி பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 டம்ளர்
பாசிப் பருப்பு - 1 டம்ளர்
இஞ்சி துருவியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
முந்திரி - 50 கிராம்

செய்முறை:

* குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீ­ர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.

* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.

* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.

* இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.