Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 8 July 2012

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் - 3 டம்ளர்
நெய - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய - 6
வெள்ளைப் பூண்டு உரித்தது - 10 பல்லு
பெரிய தேங்காய - 1/2 மூடி
உப்பு - 2 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

* முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமாகத் தண்ணீ­ர் வைத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

* தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை அம்மியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

* கனமான வெங்கல உருளி அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரத்தில் நெய்யை வைத்துக் காய்ந்தவுடன், முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு முதலியவைகளையும் போட்டுச் சிவப்பாக வறுபட்ட உடன் அம்மியில் வைத்துத் தட்டிய பொடியையும் போட்டு தேங்காய்ப் பாலும் தண்­ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது அரிசியைக் கழுவிப் போட வேண்டும்.

* தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.

* அரிசி நன்றாக வெந்த பிறகு உப்பு, வெந்த காய்கறிகளையெல்லாம் போட்டுக் கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

* இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.

வெண்டைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 150 கிராம்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
பெ.வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
தக்காளி - 3 (மீடியம் சைஸ்)
புளி - 25 கிராம்
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

தாளிக்க:

சி.வெங்காயம் - 5
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதைக்கி வைத்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் தேங்காய் துறுவலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.

* கமகமக்கும் சுவையான சாம்பார் ரெடி.

* அப்பறென்னங்க ஒங்க வீடே ஒரே சாம்பார் வாசனையாதான் இருக்கும்.

Saturday, 7 July 2012

ஃப்ரூட் சாலட்

தேவையான பொருட்கள்:

தோல் சீவி சிகப்பான பகுதியை துண்டுகளாக்கிய தர்பூசணி - 1 கப்
கிர்ணிப்பழம் - 1 கப்
முலாம் பழம் - 1 கப்
இனிப்பான நார் இல்லாத மாம்பழம் - 1 கப்
இளசாக உள்ள நுங்கு துண்டுகள் - 1 கப்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
தேவையானால் கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்

(இது தவிர வாழைப்பழத் துண்டுகள் - 1 கப், கொட்டையில்லாத திராட்சை - 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் - 1 கப், காஸ் மீது வைத்து அரை நிமிடம் சுட்டு, தோல் நீக்கி, குறுக்கே வெட்டி, விதைகள் நீக்கி துண்டுகள் போட்ட இனிப்பான பெங்களூர் தக்காளி - 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம்.)

செய்முறை:

* எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்ரேயில் வைக்கவும்.

* பால் சூடாக்கி, குளிர்ந்த பால் கரைத்த கஸ்டர்டு பவுடரை அதில் ஊற்றி அடி பிடிக்காமல் கொதித்ததும் நன்கு ஸ்பூனால் குழைத்து ஆறியதும் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

* குழந்தைகளுக்குத் தேவையான போது பழக் கலவையின் மீது - 1 ஸ்பூன் கஸ்டர்ட் போட்டு கிண்ணத்தில் கொடுத்தால் எல்லா பழங்களையும் சாப்பிடுவார்கள்.

* சுமார் - 15 குழந்தைகள் பங்குபெறும், பிறந்தநாள் விழா அல்லது கெட் டு கெதர் பார்ட்டிக்கு - 2 மாம்பழம், - 1 கிர்ணிப்பழம், - 1 முலாம் பழம், - 4 தக்காளி, 100 - கிராம் திராட்சை, - 10 நுங்கு போதும். குறைந்த செலவில் சத்தான சுவையான விலை குறைவான சாலட் ரெடி. தோல் சீவிக் கொடுத்து விட்டால் அவர்களே தயாரித்து விடுவார்கள்.

சோயா பீன்ஸ்-உருளை பால்கறி

தேவையான பொருட்கள்:

உரித்த சோயா பீன்ஸ் - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
தக்காளி பெரியது - 3
பூண்டு பெரிய பல் - 4

அரைக்க:

தேங்காய் சிறியது - 1
பச்சைமிளகாய் - 6
சோம்பு - 1 டீ ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு
இலவங்கப்பட்டை - சிறிதளவு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* சோயா பீன்ஸை அரை வேக்காடு வேக வைத்துக்கொள்ளவும்.

* தேங்காயை துறுவி அதோடு பச்சைமிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைத்துக்கொள்ளவும்.

* இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* தாளித்தவுடன் நறுக்கி வைத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

* பின்பு தேவையான தண்ணீ­ர் ஊற்றி அரை வேக்காடு வேக வைத்த பீன்ஸை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* அதோடு தட்டி வைத்த பூண்டை கொதிக்கும் பால்கறியில் சேர்க்கவும்.

* இப்போது நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி இறக்கி வைத்த பால்கறியில் தூவவும்.

* கமகமக்கும் சோயா பீன்ஸ்-உருளை பால்கறி ரெடி.

* இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையுடன் இருக்கும்.

குறிப்பு: தேங்காயை நைசாக அரைக்காமலும், திப்பி திப்பியாக அரைக்காமலும் ஓரளவு நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய் பால் எடுத்துகூட செய்யலாம். பால் நல்ல திக்காக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

கத்திரிக்காய் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

* நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

* சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்.

ஹோம் மேட் சாக்லேட்

தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லேட் பார் - 1
பிரவுன் சாக்லேட் பார் - 1
முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் - தேவையானது

செய்முறை:

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் ட்ரை புரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* கேஸை ஒரே சூட்டில் வைத்திருக்கவும் அப்போது தான் சூடு மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரே எடுத்து அதனுள் ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.

* இந்த ட்ரேயை எடுத்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மெண்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு: கீழ் வைக்கும் பாத்திரத்தை விட, மேல் வைக்கும் பாத்திரம் பெருசாக இருக்க வேண்டும், அப்போது தான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இல்லைனா, கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் கம்மியானால், ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரே உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடற ஹோம் மேட் சாக்லேட் கம்மி செலவுல, வீட்டிலேயே பண்ணலாம். ட்ரைப்ரூட்ஸ் பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேபெர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கட், போலோ ஆகியவைகள்.

அரைநெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
அரை நெல்லிக்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 10
தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் - தலா 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்.

* நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள்.

* 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்குங்கள்.

* பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி நைசாக அரைத்தெடுங்கள்.

* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பலை, ஆகியவற்றை தாளியுங்கள்.

* சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.

தேங்காய் ரசம்

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்
பூண்டு - 5
தக்காளி விழுது - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம், கடுகு - சிறிதளவு
மெலிதாகச் சீவிய பூண்டு - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* தக்காளியை சுடு நீரில் வைத்து, 10 நிமிடம் கழித்து, மேல் தோல் நீக்கி விட்டு விழுதாக அரைக்கவும்.

* தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு தண்­ணீர் ஊற்றி, அதில் தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.

* பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மிளகு தூள், மல்லித்தூள் போட்டு லேசாக கொதிக்க விடவும்.

* நுரைத்து வந்தால் போதும். நெய்யில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

* ஆந்திர மக்கள் இந்த ரசத்தைப் பொங்கலுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது சாதத்துடன் பரிமாறவும் ஏற்றது.

சிக்கன் கோலா உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன்(Skinless, Boneless Chicken) - 1/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

இஞ்சி பூண்டு விழுது:

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1

சிக்கன் உருண்டைகள் செய்ய:

வெங்காயம் - 1
அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுகடலை - 1/2 கப்
எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

குழம்பு தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - 1
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்

குழம்பில் சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள: (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)

தேங்காய் - 1 சிறிய துண்டு
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

கடைசியில் சேர்க்க:

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

* வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி குழம்பிற்கு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை இஞ்சி, பூண்டு விழுதினை பாதி + வெங்காயம் என்று ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளியினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* புளியினை 2 - 3 கப் தண்ணீ­ர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* புளி தண்­ணீருடன் குழம்பிற்கு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொண்டு கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.

* சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பொட்டுகடலையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* சிக்கன் + வெங்காயம் + தூள் வகைகள் + அரைத்த பொட்டுகடலை + இஞ்சி-பூண்டு விழுது என அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* சிக்கன் கலவையினை சிறிது எண்ணெய் தொட்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

* தேங்காய் + கசகசா + சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.

* புளிகரைசல் நன்றாக கொதித்த பிறகு, தேங்காய் விழுதினை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

* கொதிக்கும் பொழுது, உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை குழம்பில் ஒவ்வொன்றாக மெதுவாக போடவும்.

* சுமார் 15 நிமிடங்களில் சிக்கன் உருண்டைகள் அனைத்தும் குழம்பில் வெந்து மேலே மிதக்கும்.

* கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

* சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி.

கவனிக்க:

* புளியினை அதிகம் சேர்க்க வேண்டாம். புளிக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

* சிக்கன் உருண்டைகள் மிகவும் தண்ணியாக பிடிக்கவரவில்லை என்றால் சிறிது பொட்டுகடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

* சிக்கன் உருண்டைகளை உருட்டும் பொழுது எண்ணெய் சிறிது தொட்டு கொண்டு உருட்டினால் எளிதில் உருண்டை வரும்.

* குழம்பில் சிக்கன் உருண்டைகளை போடும் பொழுது ஒவ்வொன்றாக எடுத்து போடவும். (பயம் வேண்டாம்..கண்டிப்பாக உருண்டைகள் உடையாது.)

* விரும்பினால் எண்ணெயில் பொரித்தும் உருண்டைகளை குழம்பில் சேர்க்கலாம்.

முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2
கோதுமை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
ஓமம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

* துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீ­ர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.

முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல்தானே!

பட்டர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)
பூண்டு - 3
பல்லாரி - 2
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 5
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் - டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 10 இலைகள்
மல்லித்தழை - 1 கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

* நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

* நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீ­ர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீ­ர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.)

* சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்­ணீரை வற்ற விடவும்.

* சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.

* வெண்ணெயை கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

* கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்.

* வெண்ணெயுடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும்.
* வெண்ணெயில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடிபிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி.

கோதுமைமாவு குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பட்டாணி - கால் கப்
மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும்.

* உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

* கோதுமை மாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

* உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.

முருங்கைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:

சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்
கடலைப்பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - கால் டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்
கடுகு - கால் டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

* பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.

* கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும்.

காரச்சேவு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கிலோ
டால்டா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகு தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு, பெருங்காயப்பொடி - 1 டீ ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - சிறிதளவு
எண்ணெய் - 500 கிராம்

செய்முறை:

* எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.

ரிப்பன் பக்கோடா

தேவையான பொருள்கள்:

கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 5 டீ ஸ்பூன் (அ) தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
சோடா மாவு - சிட்டிகை அளவு
எண்ணை பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:

* கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

* தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

* காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

* (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

* கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.

Wednesday, 4 July 2012

சீனி அதிரசம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீ ஸ்பூன்
நெய் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

* பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு மூழ்குமளவு நீர் வைத்து கொதிக்க வைக்கவும்.

* கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும்.

* சிறிது நேரத்தில் பொங்கும் போது மேலோடு அழுக்கை எடுக்கவும்.

* பின் சிறிது கிண்ணத்தில் நீர் வைத்து சர்க்கரையை அதில் விட்டு பார்த்தால் உருண்டையாக நிற்கும்.

* அப்பொழுது பாகை அடுப்பிலிருந்து இறக்கி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறி நெய் கலந்து வைக்கவும்.

* மறுநாள் ஒரு கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பின்குறிப்பு:

* பச்சரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து நீரில்லாமல் வடிகட்டி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கவும்.

* மிகவும் நைசாக இல்லாமலும், கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கணும்.

* குறிப்பிட்டிருக்கும் 2 கப் பச்சரிசி மாவு ஊறவைத்து அரைத்த மாவுதான்.

* மாவை எண்ணெயில் பொரிக்கும் போது தடிமனாக இல்லாமலும், மெல்லியதாக இல்லாமலும் தட்டவும்.

* மாவு தளர்த்தியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போட்டு கிளறி வைக்கவும்.

* மாவை கிளறி வைத்து உடனே சுடுவதை விட 2 நாள் வைத்திருந்து சுட நல்லாயிருக்கும்.

* இந்த அளவில் 7 அதிரசங்கள் வரும்.

பாசிப்பருப்பு பர்பி

தேவையான பொருட்கள்:

வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3/4 கப்

செய்முறை:

* சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.

* இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும்.

* கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

* உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.

பின்குறிப்பு:

* கடையில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பு மாவை உபயோகித்தால் நன்றாகயிருக்கும்.

* ஒற்றை கம்பி பதம் என்பது 2 விரல்களுக்கிடையே ஒற்றை இழைபோல வரும். அதுதான் பர்பி செய்ய சரியான பதம்.

* தூளாக வந்த பர்பியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி லட்டுகளாக பிடிக்கவும்.

பொரி விளங்கா உருண்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு - 1/4 படி
தேங்காய் - 1 துருவியது

வெல்லப்பாகு தயாரிக்க:

வெல்லம் - 1 கிலோ
சுக்கு - ஒரு துண்டு
ஏலக்காய் - 4

செய்முறை:

வெல்லத்தை கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து சுக்கை தட்டி, ஏலக்காயை பிய்த்து போட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.

தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து வைக்கவும்.

பின் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, தேங்காய் அனைத்தும் கலந்து கொஞ்சம் வெல்லப்பாகை ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்.

சத்தான பொரி விளங்கா உருண்டை ரெடி.

முந்திரிக் கொத்து

பச்சைப்பயிறு உடலுக்கு வலுவைத் தரும் ஒரு அற்புதமான தானியம். இதை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது... பச்சைப்பயரில் இப்படியொரு பலகாரமானு ஆச்சர்யப்படாமல் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.. பிரமாதம்னு அப்பறம் சொல்லுவீங்க........

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1/2 கிலோ
பச்சைப்பயிறு - 1/2 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலக்காய் - 10
மைதா - 1/4 கிலோ
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, பச்சைப்பயிறு ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.

5 ஏலக்காயை மட்டும் எடுத்து தனியே வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலி அல்லது வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, வெல்லத்தை உடைத்துப் போட்டு, வெல்லம் மூழ்கும் வரை தண்ணீ­ர் விட்டு காயவிடவும்.

மீதமுள்ள 5 ஏலக்காயை தனியே வறுத்து பொடியாக்கி அடுப்பில் காய்ந்து கொண்டுள்ள வெல்லத்துடன் சேர்க்கவும்.

வெல்லம் கரைந்து பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மிஷினில் அரைத்து வைத்துள்ள மாவை வாயகன்ற பாத்திரம் அல்லது பேசினில் சிறிது சிறிதாகப் போட்டு அதில் தேவையான அளவு பாகு சேர்த்து, கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு, கையில் மாவு ஒட்டாமல் பிசையவும்.

பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக, கோலி குண்டு அளவிற்குப் பிடித்துக் கொள்ளவும்.

தனியே ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, தண்­ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், தீயை மட்டுப்படுத்தி மிதமான தீயில் எரிய விடவும்.

பின்பு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மூன்று மூன்றாக எடுத்து ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி வாணலியில் உள்ள எண்ணெயில் போட்டு வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வேக விடவும்.

மைதா மாவு தீய்ந்து விடாமல் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.

எண்ணெய் வடிந்ததும், சூடாகவும் சாப்பிடலாம், பத்து நாட்கள் வரை, காற்று புகாத டப்பாவில் பாதுகாத்து வைத்தும் சாப்பிடலாம்.

குறிப்பு:

பிசுபிசுப்பு பதம் என்பது பாகு காயும் போது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பாகை தொட்டு ஒட்டிப் பார்த்தால் பிசுபிசுவென்று ஒட்டும்.

மிஷினில் அரைத்த மாவு அனைத்தையும் ஒரே நேரத்தில் பிசையாமல் சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு அதனுடன் பாகு சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

மூன்று உருண்டைகள் ஒன்றாகச் சேர்ந்து முந்திரிக் கொத்து போல் காட்சியளிப்பதால், இது அவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இதில் முந்திரி சேர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் விசேஷம்.

பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் அரைக்காமல் மாவு மிஷினில் அரைத்தால் மாவு மிகவும் வாசனையாக இருக்கும்.

மாங்காய் தக்காளி சாதம்

மாங்காய் சீசன் ஆரம்பிச்சாச்சு.. ஆஹா இனி சுவையான மாங்காய் வெரைட்டீஸ் செய்து சாப்பிடலாம். இப்போது ஈஸியான ரெசிபில தொடங்குவோம். சிம்பிளா செய்து சூப்பரா சாப்பிடுங்க........

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
சிறிய மாங்காய் - 1
பெரிய வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4
சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு - கடுகு, சிறிது கறிவேப்பிலை
தண்ணீ­ர், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்­ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.

* பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச் சாதம் தயார்.

Tuesday, 3 July 2012

பனீர் வெஜ் மின்ட் கறி

எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பனீர் - 100 கிராம்

வதக்கி அரைக்க

புதினா - ஒரு கட்டு
கொத்து மல்லி - அரை கட்டு
கருவேப்பிலை - கால் கட்டு
பச்ச மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு லெமென் சைஸ்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - முன்று
தக்காளி - நன்கு
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு

செய்முறை:

* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்... அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....!

தேவையான பொருட்கள்:

மசாலா அரைத்துக்கொள்ள:

வெங்காயம் - 2
பேல் பூரி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.

* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.

* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

பால் கொழுக்கட்டை

சாதாரண கொழுக்கட்டையாவே சாப்பிடுறதுக்கு போரடிக்குதா... இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க! மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்... சிறுசு, பெருசு என அனைவரின் நாவையும் சுண்டி இழுக்கும் இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் - தேவைக்கு
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1\2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சவும்.

* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* சிறிது உப்பு சேர்க்கவும்.

* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.

* பின்னர், பால், தேங்காய்ப்பால் - இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.

* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!

இதன் சிறப்பு:

* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.

* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.

* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.

சுறா மீன் புட்டு

மீன் குழம்பு, வறுவல், பொரியல்னு செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு. 'குழந்தைகளுக்கு சத்தான மீன் கொடுக்கணும்னு ஆசை ஆனா முள் இருக்கிறதால சாப்பிட பயப்படுறாங்க. என்ன செய்றதுனு' புலம்பும் தாய்மார்களுக்கு இதோ ஈஸியான சுறா புட்டு, முள்ளுங்கிற பேச்சுக்கே இடமில்ல... உங்க குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.. செய்து கொடுத்து அசத்துங்க.....

தேவையான பொருட்கள்:

சுறா மீன் துண்டு - 300 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3 அல்லது 4
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 6 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* அதனுடன் மஞ்சள் சேர்க்கவும்.

* மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம்.

* மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக(அதாவது) உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

* கடாயை சூடாக்கவும்.

* அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

* அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

* உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

தேங்காய் மட்டன் பிரட்டல்

எளிமையா ஒரு மட்டன் ஃபிரை வேணும்னா.. இந்த மட்டன் பிரட்டல் செஞ்சு பாருங்க. சுவையும் மணமும் சும்மா தூக்கலா இருக்கும். ரொம்ப சிக்கனமானதும் கூட. எல்லா நாட்களிலும் செய்யலாம். எல்லா சாப்பாட்டோடும் ஒத்துப்போகும் சூப்பரான சைட் டிஷ் இது!

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 15
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - 1/4 மூடி
மிளகு தூள் - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்ட மிளகாய் - 5
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

* வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும்.

* தேங்காயை மெல்லிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

* கொடுத்துள்ள பொருட்கள் (மிளகை தவிர) எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

* கடைசியில் மிளகு தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.

* எண்ணைய் நல்லா சூடானதும் கறிவேப்பிலை, பட்ட மிளகாய் பொரித்து, கறி மீது ஊற்றி நன்கு பிரட்டவும்.

Monday, 2 July 2012

வான்கோழி பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி (அ) ஜீரக சம்பா பச்சரிசி - 3 கப்
வான்கோழியின் பக்கவாட்டு பாகங்கள் - 900 கி
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
நறுக்கிய புதினா இலை - 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேஜீபட்டா (லவங்க செடியிலை) - 2
லவங்கப்பட்டை - 2 அங்குலம்
ஏலக்காய் - 2
லவங்கம் - 4
தயிர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 2 டீ ஸ்பூன்
நறுக்காத பச்சைமிளகாய் - 5
எலுமிச்சை - 1
முந்திரிப்பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 10
குங்குமப்பூ கலர் - 2 துளி
ரோஜா எஸன்ஸ் - 2 துளி
பால் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வான்கோழி பிரியாணியின் சுவை அதிகரிக்க வான்கோழி மாமிசத்தை ஒரு நாள் முன்பு மசாலாக்களில் தோய்த்து வைக்க வேண்டும். சரியாக சமைக்கும் முன்பு 24 மணி நேரம் தான் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மாமிசத்தை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இதை செய்யும் முறை -

* வான்கோழி மாமிச பாகங்களை நன்றாகக் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டவும்.

* அதன் மேல் 1/4 கரண்டி மஞ்சள் பொடியை தடவவும்.

* பிறகு 1 கப் தயிர் அதில் 2 டீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப் பொடி, 1 டீ ஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1/2 டீ ஸ்பூன் பூண்டு பேஸ்ட், 2 டீ ஸ்பூன் உப்பு, 1/2 மூடி எலுமிச்சைபழச்சாறு இவற்றை கலந்து அதில் வான்கோழி மாமிசத்தை தோய்த்து வைக்கவும். ஒரு பாலித்தீன் பையில் மூடி ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

க்ரேவி செய்முறை:

* அடிகனமான வாணலியில் 3 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை காய்ச்சவும்.

* பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், லவங்கம், தேஜீபட்டா இவற்றை சேர்க்கவும்.

* பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

* இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் கசியும் வரை வதக்கவும்.

* மீதியுள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகளை போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஃப்ரிட்ஜில் வைத்த வான்கோழி மாமிசங்களை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

* பிறகு ப்ரஷர் குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அரிசியை சமைக்கும் முறை:

* அரிசியை கழுவி அரை மணிநேரம் ஊற விடவும்.

* அடுப்பில் பத்து கப் தண்ணீரை கொதிக்க விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு, 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும்.

* பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நீரை வடிகட்டவும். வடிகட்டிய அரிசியை தனியே வைக்கவும்.

அலங்கரிக்க:

* முந்திரிப்பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் ஒரு வாணலியில் ஒரு டீ ஸ்பூன் நெய் விட்டு வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.

பிரியாணி அடுக்குகளை தயாரித்தல்:

* ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் பாதி அரிசியை பரவலாக நிரப்பவும்.

* இதன் மேல் வான்கோழி கிரேவியை பரப்பவும்.

* மறுபடியும் இன்னொரு அடுக்கு அரிசியை பரவலாக நிரப்பவும்.

* இதன் மேல் நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்காத பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, மற்றும் உலர்ந்த திராட்சையை பரப்பவும்.

* 2 டீ ஸ்பூன் பாலுடன் இரு துளிகள் ரோஜா எஸன்ஸையும், குங்குமப்பூ கலரையும் கலக்கவும்.

* இதை அரிசியின் மேல் பாகத்தில் தூவவும்.

* இவற்றின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை தடவவும்.

* தட்டை ஒரு அலுமினிய ஃபாயிலால் மூடவும். முன்பே சூடுபடுத்திய அவனில் 350 டிகிரி எஃப் சூட்டில் ஒரு மணி நேரம் சமைக்கவும்.

* வான்கோழி பிரியாணியை சூடாக வெங்காய பச்சடியுடனும், கோழி கிரேவியுடனும் பரிமாறலாம்.