தேவையான பொருட்கள்:
மட்டன் - 7 (அ) 8 சின்ன துண்டுகள்
வெங்காயம் - 1/2
இஞ்சி, பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
* குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.
* கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.
* பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
* மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.
* பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.
* சுவையான மட்டன் பக்கோடா ரெடி.
இதே மாதிரி சிக்கன் பக்கோடாவும் செய்யலாம். எலும்புடன் அல்லது எலும்பில்லாமல், சிறு சிறு துண்டுகளாக வேக வைத்துக்கொள்ளவும்.
Monday, 27 August 2012
வேர்க்கடலை பிட்லா
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 50 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 8
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - 10
வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
கசகசா - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை புளி கரைசல் - தலா 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* வேர்க்கடலை மற்றும் துவரம்பருப்பை தனித்தனியாக வேகவைக்கவும்.
* எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும்.
* வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
* நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேக விடவும்.
* வெந்தபின் புளிக்கரைசலை விடவும்.
* பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
* 10 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
* பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை ரெடி!
துவரம் பருப்பு - 50 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 8
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - 10
வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
கசகசா - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை புளி கரைசல் - தலா 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* வேர்க்கடலை மற்றும் துவரம்பருப்பை தனித்தனியாக வேகவைக்கவும்.
* எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும்.
* வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
* நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேக விடவும்.
* வெந்தபின் புளிக்கரைசலை விடவும்.
* பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
* 10 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
* பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை ரெடி!
முட்டை ரவாப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
ரவை - 150 கிராம்
மைதா - 150 கிராம்
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - 150 கிராம்
சோடா உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 20 கிராம்
செய்முறை:
* முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.
* ரவை, மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடா உப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும்.
* பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
* சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
* பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும்.
முட்டை - 2
ரவை - 150 கிராம்
மைதா - 150 கிராம்
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - 150 கிராம்
சோடா உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 20 கிராம்
செய்முறை:
* முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.
* ரவை, மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடா உப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும்.
* பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
* சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
* பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும்.
அரிசி பாயசம்
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 200 கிராம்
பால் - 2 லிட்டர்
அரைத்த முந்திரிப் பருப்பு விழுது - 100 கிராம்
குங்குமப்பூ - 5 அல்லது 6 இழை
வெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 150 கிராம்
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை, குங்குமப்பூ சேர்த்துக் காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலைத் தனியே எடுத்து வைக்கவும். இன்னொரு அடுப்பில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் அரிசியை வறுக்கவும். அது பிஸ்கட் கலரில் மாறிப் பொரிய ஆரம்பிக்கும் போது எடுத்து, கொதித்துக் கொண்டிருக்கிற பாலில் போட்டுக் கிண்டவும். அரிசி உடைந்து வேக ஆரம்பிக்கும். அப்போது முந்திரி விழுது சேர்க்கவும். தனியே எடுத்து வைத்துள்ள ஒரு லிட்டர் பாலை, கால் லிட்டர், கால் லிட்டராக - 5 நிமிட இடைவெளி விட்டுச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். சர்க்கரை, கிராம்பு சேர்க்கவும். கலவை பஞ்சாமிர்தப் பதத்துக்கு வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை அதில் சேர்க்கவும். மீதி 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் தேங்காய் துருவலை பொன்னிறத்துக்கு வறுத்துச் சேர்க்கவும். லேசான மஞ்சளும் பழுப்பும் கலந்த கலரில் இருக்கும். இந்தப் பாயசத்தை குளிர வைத்துப் பரிமாறவும்.
சீரக சம்பா அரிசி - 200 கிராம்
பால் - 2 லிட்டர்
அரைத்த முந்திரிப் பருப்பு விழுது - 100 கிராம்
குங்குமப்பூ - 5 அல்லது 6 இழை
வெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 150 கிராம்
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை, குங்குமப்பூ சேர்த்துக் காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலைத் தனியே எடுத்து வைக்கவும். இன்னொரு அடுப்பில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் அரிசியை வறுக்கவும். அது பிஸ்கட் கலரில் மாறிப் பொரிய ஆரம்பிக்கும் போது எடுத்து, கொதித்துக் கொண்டிருக்கிற பாலில் போட்டுக் கிண்டவும். அரிசி உடைந்து வேக ஆரம்பிக்கும். அப்போது முந்திரி விழுது சேர்க்கவும். தனியே எடுத்து வைத்துள்ள ஒரு லிட்டர் பாலை, கால் லிட்டர், கால் லிட்டராக - 5 நிமிட இடைவெளி விட்டுச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். சர்க்கரை, கிராம்பு சேர்க்கவும். கலவை பஞ்சாமிர்தப் பதத்துக்கு வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை அதில் சேர்க்கவும். மீதி 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் தேங்காய் துருவலை பொன்னிறத்துக்கு வறுத்துச் சேர்க்கவும். லேசான மஞ்சளும் பழுப்பும் கலந்த கலரில் இருக்கும். இந்தப் பாயசத்தை குளிர வைத்துப் பரிமாறவும்.
Saturday, 25 August 2012
பெப்பர் மஷ்ரூம்
தேவையான பொருட்கள்:
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
சோள மாவு - 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1
பால் - 1\4 கப்
பூண்டு - 5 பல்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* பட்டன் மஷ்ரூம், வெங்காயம், பூண்டு இவற்றை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் நான்கு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
* இதில் மஷ்ரூம், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ரை தெளித்து வேக விடவும்.
* சோள மாவில் பால் சேர்த்துக் கரைத்து, வெந்த மஷ்ரூமில் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.
* கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* இது பிரெட் டோஸ்டுக்கு ஏற்றது.
* வதக்கும்போது கால் கப் பனீர் துண்டுகளை சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
சோள மாவு - 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1
பால் - 1\4 கப்
பூண்டு - 5 பல்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* பட்டன் மஷ்ரூம், வெங்காயம், பூண்டு இவற்றை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் நான்கு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
* இதில் மஷ்ரூம், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ரை தெளித்து வேக விடவும்.
* சோள மாவில் பால் சேர்த்துக் கரைத்து, வெந்த மஷ்ரூமில் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.
* கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* இது பிரெட் டோஸ்டுக்கு ஏற்றது.
* வதக்கும்போது கால் கப் பனீர் துண்டுகளை சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
வாத்துகறி குழம்பு
தேவையான பொருட்கள்:
வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
* வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.
* புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.
* வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
* வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.
* கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
* இந்த குழம்பு புளிப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.
வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
* வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.
* புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.
* வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
* வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.
* கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
* இந்த குழம்பு புளிப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.
சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
காலிஃப்ளவர் - 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை லவங்கம் - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்குத் தேவையானவை:
கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 6
மிளகு - 2 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
சீரகம், சோம்பு - 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - 1 கப்
செய்முறை:
* சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக் கொள்ளவும்.
* உப்பும், மிளகாய்த் தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டி வைக்கவும்.
* தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.
* மசாலாக்களுக்குத் தேவையானவைகளை சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் இவைகளைப் போட்டு வறுக்கவும்.
* கடைசியாக தேங்காய்பூவையும் போட்டு வறுத்து சற்று ஆறவிட்டு அதை மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.
* சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு அது சூடானதும், பட்டை, லவங்கம் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தையும் போட்டு பின்பு, காலிஃபிளவரை சேர்த்து லேசாகக் கிளறிவிடவும்.
* அது வதங்கியதும் பின்பு அதோடு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதுவும் சற்று மசங்கியதும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
* அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து வைத்து மூடவும். மசாலா வாசம் போய் நல்ல வாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.
சிக்கன் - 1/2 கிலோ
காலிஃப்ளவர் - 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை லவங்கம் - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்குத் தேவையானவை:
கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 6
மிளகு - 2 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
சீரகம், சோம்பு - 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - 1 கப்
செய்முறை:
* சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக் கொள்ளவும்.
* உப்பும், மிளகாய்த் தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டி வைக்கவும்.
* தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.
* மசாலாக்களுக்குத் தேவையானவைகளை சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் இவைகளைப் போட்டு வறுக்கவும்.
* கடைசியாக தேங்காய்பூவையும் போட்டு வறுத்து சற்று ஆறவிட்டு அதை மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.
* சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு அது சூடானதும், பட்டை, லவங்கம் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தையும் போட்டு பின்பு, காலிஃபிளவரை சேர்த்து லேசாகக் கிளறிவிடவும்.
* அது வதங்கியதும் பின்பு அதோடு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதுவும் சற்று மசங்கியதும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
* அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து வைத்து மூடவும். மசாலா வாசம் போய் நல்ல வாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.
பாகற்காய் தக்காளிப் புளிக்கறி
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 250 கிராம்
தக்காளிப்பழம் - 250 கிராம்
வெங்காயம் - 5
பூண்டு - 10
வெந்தயம் - 2
மிளகாய் வத்தல் - 5
கறிவேப்பிலை - சிறிது
புளி - 25 கிராம்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
நீர் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பாகற்காய் - 250 கிராம்
தக்காளிப்பழம் - 250 கிராம்
வெங்காயம் - 5
பூண்டு - 10
வெந்தயம் - 2
மிளகாய் வத்தல் - 5
கறிவேப்பிலை - சிறிது
புளி - 25 கிராம்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
நீர் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கொள்ளுப் பருப்பு பொங்கல்
தேவையான பொருட்கள்:
கொள்ளுப் பருப்பு - 1/2 கப்
அரிசி - 1 கப்
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* கொள்ளை வாசம் வரும்வரை நன்கு வறுத்து உரலில் குத்தி உமி போக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதை அரிசியுடன் ஒன்றாகக் கலந்து கழுவி உலை கொதித்தபின் போட்டு வேக விடுங்கள்.
* பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்கு குழைய விடுங்கள்.
* பின், நெய் விட்டு, கூடவே சீரகம், மிளகு இரண்டையும் தாளித்துக் கொள்ளுங்கள்.
* இந்தப் பொங்கலின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..? இது ஊளைச் சதையைக் குறைக்கும்.
கொள்ளுப் பருப்பு - 1/2 கப்
அரிசி - 1 கப்
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* கொள்ளை வாசம் வரும்வரை நன்கு வறுத்து உரலில் குத்தி உமி போக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதை அரிசியுடன் ஒன்றாகக் கலந்து கழுவி உலை கொதித்தபின் போட்டு வேக விடுங்கள்.
* பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்கு குழைய விடுங்கள்.
* பின், நெய் விட்டு, கூடவே சீரகம், மிளகு இரண்டையும் தாளித்துக் கொள்ளுங்கள்.
* இந்தப் பொங்கலின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..? இது ஊளைச் சதையைக் குறைக்கும்.
மக்காச்சோள குருணை பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி குருணை - 1 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
காய்ந்த சோள ரவை - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய்(நறுக்கியது) - 2
மிளகு, சீரகம்(பொடித்தது) - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய், நெய்(கலந்தது) - 1/2 கப்
உடைத்த முந்திரி - 1 கப்
செய்முறை:
* பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர்களில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை) வறுத்துக்கொள்ளவும்.
* பிறகு ஒரு குக்கரில் 4-5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.
* வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும்.
* இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.
பச்சரிசி குருணை - 1 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
காய்ந்த சோள ரவை - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய்(நறுக்கியது) - 2
மிளகு, சீரகம்(பொடித்தது) - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய், நெய்(கலந்தது) - 1/2 கப்
உடைத்த முந்திரி - 1 கப்
செய்முறை:
* பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர்களில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை) வறுத்துக்கொள்ளவும்.
* பிறகு ஒரு குக்கரில் 4-5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.
* வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும்.
* இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.
வெஜ் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 4 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
பெரிய கேரட் - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - 10 கிராம்(பொடியாக நறுக்கியது)
பூடு - 4 பல்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கடுகு உளுந்து - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணைய் - 1 குழிக்கரண்டி
நெய் - 100 மி.லி.
முந்திரி - 15
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* அரிசியை உப்பு போட்டு, நன்கு குழைய வேக வைக்கவும்.
* பாசிப்பருப்பை சிம்மில் சிவக்க வறுத்து, நன்கு குழைய வேக வைக்கவும்.
* தனித்தனியே வேக வைத்த சாதத்தையும் பருப்பையும் ஒன்றாக கிளறவும்.
* கொழ கொழன்னு வருவதற்கு பருப்பு வேக வைத்த தண்ணியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும்.
* சாதம் செட்டாகும் நேரத்தில்..., ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு உளுந்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
* பொரிந்த பின் கேரட்டையும் வேக வைத்த பட்டாணியையும் சேர்த்து வதக்கவும்.
* சாதம், பருப்பு, வதக்கிய காய் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.
* இறக்கியவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி, மீதமுள்ள நெய் ஊற்றி பரிமாறவும்.
* தண்ணீருக்கு பதில் தேங்காய்ப் பால் பயன்படுத்தினால் சுவை இன்னும் பிரமாதமா இருக்கும்.
* புதினா சட்னி இதற்கு சரியான சைட் டிஷ்!
பச்சரிசி - 4 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
பெரிய கேரட் - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - 10 கிராம்(பொடியாக நறுக்கியது)
பூடு - 4 பல்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கடுகு உளுந்து - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணைய் - 1 குழிக்கரண்டி
நெய் - 100 மி.லி.
முந்திரி - 15
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* அரிசியை உப்பு போட்டு, நன்கு குழைய வேக வைக்கவும்.
* பாசிப்பருப்பை சிம்மில் சிவக்க வறுத்து, நன்கு குழைய வேக வைக்கவும்.
* தனித்தனியே வேக வைத்த சாதத்தையும் பருப்பையும் ஒன்றாக கிளறவும்.
* கொழ கொழன்னு வருவதற்கு பருப்பு வேக வைத்த தண்ணியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும்.
* சாதம் செட்டாகும் நேரத்தில்..., ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு உளுந்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
* பொரிந்த பின் கேரட்டையும் வேக வைத்த பட்டாணியையும் சேர்த்து வதக்கவும்.
* சாதம், பருப்பு, வதக்கிய காய் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.
* இறக்கியவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி, மீதமுள்ள நெய் ஊற்றி பரிமாறவும்.
* தண்ணீருக்கு பதில் தேங்காய்ப் பால் பயன்படுத்தினால் சுவை இன்னும் பிரமாதமா இருக்கும்.
* புதினா சட்னி இதற்கு சரியான சைட் டிஷ்!
இஞ்சி பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 டம்ளர்
பாசிப் பருப்பு - 1 டம்ளர்
இஞ்சி துருவியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
முந்திரி - 50 கிராம்
செய்முறை:
* குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.
* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.
* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.
* இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.
பச்சரிசி - 2 டம்ளர்
பாசிப் பருப்பு - 1 டம்ளர்
இஞ்சி துருவியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
முந்திரி - 50 கிராம்
செய்முறை:
* குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.
* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.
* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.
* இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.
வாழைப்பழப் பொங்கல்
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராட்டை - 12
ஏலக்காய் தூள் - 1 டீ ஸ்பூன்
வாழைப்பழம்(பொடியாக நறுக்கியது) - 2
பால் - 1/2 கப்
செய்முறை:
* அரிசியைக் கழுவிக் கொள்ளவும்.
* பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும்.
* சிறு தீயில் குழைய வேக விடவும்.
* வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.
* அத்துடன் வாழைப்பழத்தைச் சேர்த்து, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி, மேலும் நெய் விட்டு இறக்கவும்.
* அட்டகாசமான வாழைப்பழப் பொங்கல் ரெடி.
பச்சரிசி - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராட்டை - 12
ஏலக்காய் தூள் - 1 டீ ஸ்பூன்
வாழைப்பழம்(பொடியாக நறுக்கியது) - 2
பால் - 1/2 கப்
செய்முறை:
* அரிசியைக் கழுவிக் கொள்ளவும்.
* பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும்.
* சிறு தீயில் குழைய வேக விடவும்.
* வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.
* அத்துடன் வாழைப்பழத்தைச் சேர்த்து, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி, மேலும் நெய் விட்டு இறக்கவும்.
* அட்டகாசமான வாழைப்பழப் பொங்கல் ரெடி.
வெந்தயக்கீரை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
தக்காளி பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்
தாளிக்க:
நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி
செய்முறை:
* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்
வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
தக்காளி பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்
தாளிக்க:
நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி
செய்முறை:
* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்
வெந்தயக்கீரை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
தக்காளி பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்
தாளிக்க:
நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி
செய்முறை:
* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்
வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
தக்காளி பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்
தாளிக்க:
நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி
செய்முறை:
* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்
Thursday, 23 August 2012
வேர்க்கடலை போண்டா
தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
முந்திரி பருப்பு - அரை கப்
பிரட் துண்டுகள் - 2 கப்
பால் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணை - 400 கிராம்
செய்முறை:
* வேர்க்கடலை, முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
* பிரட் துண்டுகளை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
* தேவையான உப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்துவைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக கிள்ளி எண்ணையில் போடவும்.
* நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் வடிகட்டியில் போடவும்.
* ஒருதட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: கடலை மாவு சேர்க்காதலால் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே கொடுக்கலாம்.
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
முந்திரி பருப்பு - அரை கப்
பிரட் துண்டுகள் - 2 கப்
பால் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணை - 400 கிராம்
செய்முறை:
* வேர்க்கடலை, முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
* பிரட் துண்டுகளை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
* தேவையான உப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்துவைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக கிள்ளி எண்ணையில் போடவும்.
* நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் வடிகட்டியில் போடவும்.
* ஒருதட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: கடலை மாவு சேர்க்காதலால் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே கொடுக்கலாம்.
Wednesday, 22 August 2012
கருப்பட்டி பொங்கல்
தேவையான பொருட்கள்:
கருப்பட்டி தூள் - 1 கப்
அரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி - 4
உலர் திராட்சை - 1 டீ ஸ்பூன்
பாதாம் - 4 (விருப்பப்பட்டால்)
பிஸ்தா - 1 டீ ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.
* இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து கம்பி பாகு காய்ச்சி கொள்ளவும்.(சாதம் லேசாக வேக ஆரமித்ததும் பாகு காய்ச்ச ஆரமித்தால் போதும்..பாகு ஆனவுடனேயே சாதத்தில் சேர்த்து கிளறனும் இல்லாவிட்டால் பாகு இருக்கிப்போய்விடும்..)
* பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.
* பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்சிய பாகை சேர்த்து நன்கு கிளறவும்.
* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து நன்கு கிளறவும்.
* கொதிக்க ஆரம்பிக்கும்.
* எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறவும்.
* எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
* முந்திரி திராட்சையை சேர்த்து கிளறவும்.
* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.
* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
குறிப்பு: பாகு சரியான பதம் வருவதற்கு எழு முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகும். (சிம்மில் மட்டுமே வைக்கவும்)
கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம்.
நெய் வேண்டுமானால் அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.
கருப்பட்டி தூள் - 1 கப்
அரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி - 4
உலர் திராட்சை - 1 டீ ஸ்பூன்
பாதாம் - 4 (விருப்பப்பட்டால்)
பிஸ்தா - 1 டீ ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.
* இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து கம்பி பாகு காய்ச்சி கொள்ளவும்.(சாதம் லேசாக வேக ஆரமித்ததும் பாகு காய்ச்ச ஆரமித்தால் போதும்..பாகு ஆனவுடனேயே சாதத்தில் சேர்த்து கிளறனும் இல்லாவிட்டால் பாகு இருக்கிப்போய்விடும்..)
* பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.
* பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்சிய பாகை சேர்த்து நன்கு கிளறவும்.
* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து நன்கு கிளறவும்.
* கொதிக்க ஆரம்பிக்கும்.
* எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறவும்.
* எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
* முந்திரி திராட்சையை சேர்த்து கிளறவும்.
* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.
* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
குறிப்பு: பாகு சரியான பதம் வருவதற்கு எழு முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகும். (சிம்மில் மட்டுமே வைக்கவும்)
கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம்.
நெய் வேண்டுமானால் அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.
கற்கண்டு பொங்கல்
தேவையான பொருட்கள்:
கற்கண்டு (டைமண்டு) - 1/4 கிலோ
பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
தட்டிய ஏலக்காய் - 1 டீ ஸ்பூன்
காய்ந்த திராட்சை - சிறிதளவு
முந்திரி - 100 கிராம்
எண்ணெய் - 50 கிராம்
நெய் - 100 கிராம்
பால் - 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் அரிசி பருப்பை கழுவி 4 டம்ளர் தண்ணீருடன் பால் சேர்த்து குக்கரில் வேக விட வேண்டும்.
* பிறகு வெந்தவுடன் ஏலக்காய் பொடி கற்கண்டை சேர்த்து கிளறவும்.
* பிறகு வாணலியில் நெய் ஊற்றி எண்ணெயும் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்துக் கொட்டி கிளறி இறக்கவும்.
* பத்தே நிமிடத்தில் கற்கண்டு பொங்கல் ரெடி.
* பண்டிகை நாட்களில் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து சாப்பிட இது மிகவும் உகந்த உணவாகும்.
கற்கண்டு (டைமண்டு) - 1/4 கிலோ
பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
தட்டிய ஏலக்காய் - 1 டீ ஸ்பூன்
காய்ந்த திராட்சை - சிறிதளவு
முந்திரி - 100 கிராம்
எண்ணெய் - 50 கிராம்
நெய் - 100 கிராம்
பால் - 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் அரிசி பருப்பை கழுவி 4 டம்ளர் தண்ணீருடன் பால் சேர்த்து குக்கரில் வேக விட வேண்டும்.
* பிறகு வெந்தவுடன் ஏலக்காய் பொடி கற்கண்டை சேர்த்து கிளறவும்.
* பிறகு வாணலியில் நெய் ஊற்றி எண்ணெயும் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்துக் கொட்டி கிளறி இறக்கவும்.
* பத்தே நிமிடத்தில் கற்கண்டு பொங்கல் ரெடி.
* பண்டிகை நாட்களில் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து சாப்பிட இது மிகவும் உகந்த உணவாகும்.
சிக்கன் தோசை
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.
* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.
* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.
கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.
* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.
* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.
பனீர் வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1
வறுத்து அரைக்க:
கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.
* தண்ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.
பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1
வறுத்து அரைக்க:
கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.
* தண்ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.
முடக்கத்தான் தோசை!
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
முடக்கத்தான் இலை - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும்.
* மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம்.
* மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும்.
* மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும்.
* இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி - இரண்டுமே நன்றாக இருக்கும்.
இதன் சிறப்பு:
* வாத நோய் வராமல் தடுக்கிறது.
* பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது.
* சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
புழுங்கல் அரிசி - 1 கப்
முடக்கத்தான் இலை - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும்.
* மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம்.
* மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும்.
* மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும்.
* இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி - இரண்டுமே நன்றாக இருக்கும்.
இதன் சிறப்பு:
* வாத நோய் வராமல் தடுக்கிறது.
* பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது.
* சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
மாங்காய் தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 2 கப்
சிறிய மாங்காய் - 1
பெரிய வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4
சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு - கடுகு, சிறிது கறிவேப்பிலை
தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
* அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
* பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச் சாதம் தயார்.
புழுங்கலரிசி - 2 கப்
சிறிய மாங்காய் - 1
பெரிய வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4
சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு - கடுகு, சிறிது கறிவேப்பிலை
தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
* அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
* பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச் சாதம் தயார்.
மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
தேவையானவை:
தர்ப்பூசணி துண்டுகள் (வெள்ளை பாகம்) - 2 கப்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 2 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் (விருப்பப்பட்டால்) - 4 டீ ஸ்பூன்
கேரட் துண்டு, பட்டாணி (பச்சை) - 1/4 கப்
செய்முறை:
* பயத்தம் பருப்பையும், கடலைப் பருப்பையும் சுத்தம் செய்து 1/2 கப் தண்ணீர் விட்டு, தர்ப்பூசணி துண்டுகளை அதில் போட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய்வற்றல் இவற்றை வறுத்து, அரைத்து எடுக்கவும்.
* அதே எண்ணெய் கடாயில் கடுகை வெடிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து, பச்சை பட்டாணி, கேரட் துண்டுகள் (மெலிதாக நறுக்கியது) சேர்த்து 1 நிமிடம் வதக்கியதும், வேக வைத்துள்ள தர்ப்பூசணி, பருப்பு கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
* கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும்.
* கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
* தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.
* இது சத்தானது. புதுமையானது. வித்தியாசமானது. சுவையானது. வீணாக்காமல் பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.
குறிப்பு: தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
தர்ப்பூசணி துண்டுகள் (வெள்ளை பாகம்) - 2 கப்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 2 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் (விருப்பப்பட்டால்) - 4 டீ ஸ்பூன்
கேரட் துண்டு, பட்டாணி (பச்சை) - 1/4 கப்
செய்முறை:
* பயத்தம் பருப்பையும், கடலைப் பருப்பையும் சுத்தம் செய்து 1/2 கப் தண்ணீர் விட்டு, தர்ப்பூசணி துண்டுகளை அதில் போட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய்வற்றல் இவற்றை வறுத்து, அரைத்து எடுக்கவும்.
* அதே எண்ணெய் கடாயில் கடுகை வெடிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து, பச்சை பட்டாணி, கேரட் துண்டுகள் (மெலிதாக நறுக்கியது) சேர்த்து 1 நிமிடம் வதக்கியதும், வேக வைத்துள்ள தர்ப்பூசணி, பருப்பு கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
* கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும்.
* கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
* தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.
* இது சத்தானது. புதுமையானது. வித்தியாசமானது. சுவையானது. வீணாக்காமல் பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.
குறிப்பு: தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
ஆப்பிள் சாறு - 1 கப்
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) - 3
பால் - 1 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.
* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.
* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.
* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.
முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
ஆப்பிள் சாறு - 1 கப்
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) - 3
பால் - 1 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.
* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.
* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.
* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.
தயிர் உருளை
தேவையான பொருட்கள்:
சிறிய உருளை கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
சற்று புளித்த தயிர் - 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.
* வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.
* எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
* பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.
* பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.
* பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.
சிறிய உருளை கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
சற்று புளித்த தயிர் - 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.
* வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.
* எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
* பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.
* பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.
* பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.
பருப்பு ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் - 3
ரசப்பொடி - 1 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 டீ ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்துமல்லித் தழை - தேவையான அளவு
செய்முறை:
* புளியை சிறிது தண்ணீருடன் கொதிக்க விட்டு சற்று ஆறியதும் கையால் நன்கு கசக்கி ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும்.
* புளிச்சாறுடன் சிறிது தண்ணீர், ரசப்பொடி, உப்பு சேர்த்து புளி நெடி மற்றும் ரசப்பொடி நெடி அடங்க அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
* பிறகு பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும்.
* நல்ல பழமாக உள்ள தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் புளி நீருடன் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
* துவரம் பருப்பை மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
* பிறகு துவரம் பருப்பு மற்றும் நீரை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நடுநடுவே கரண்டியால் கலந்து விடவும்.
* ரசம் நுரைத்துப் பொங்கி வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து விட்டால் பருப்பு ரசம் தயார்.
* பரிமாறுகையில் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: புதுப்புளி மற்றும் நாட்டுத் தக்காளி உபயோகித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் - 3
ரசப்பொடி - 1 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 டீ ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்துமல்லித் தழை - தேவையான அளவு
செய்முறை:
* புளியை சிறிது தண்ணீருடன் கொதிக்க விட்டு சற்று ஆறியதும் கையால் நன்கு கசக்கி ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும்.
* புளிச்சாறுடன் சிறிது தண்ணீர், ரசப்பொடி, உப்பு சேர்த்து புளி நெடி மற்றும் ரசப்பொடி நெடி அடங்க அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
* பிறகு பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும்.
* நல்ல பழமாக உள்ள தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் புளி நீருடன் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
* துவரம் பருப்பை மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
* பிறகு துவரம் பருப்பு மற்றும் நீரை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நடுநடுவே கரண்டியால் கலந்து விடவும்.
* ரசம் நுரைத்துப் பொங்கி வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து விட்டால் பருப்பு ரசம் தயார்.
* பரிமாறுகையில் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: புதுப்புளி மற்றும் நாட்டுத் தக்காளி உபயோகித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
மாம்பழப் பாயசம்
தேவையான பொருட்கள்:
இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
* மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
* சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.
* பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.
* மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.
இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
* மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
* சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.
* பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.
* மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.
Tuesday, 21 August 2012
முருங்கை பெப்பர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 4
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு - 1 டீ ஸ்பூன் (விழுதாக்கியது)
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
கொத்தமல்லி இலை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை:
* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
* பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.
* இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.
* நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சிக்கன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 4
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு - 1 டீ ஸ்பூன் (விழுதாக்கியது)
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
கொத்தமல்லி இலை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை:
* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
* பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.
* இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.
* நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Subscribe to:
Posts (Atom)